ஆண்களோ, பெண்களோ மது அருந்தியிருக்கும் போது, போதைப் பொருட்களை பயன்படுத்தியிருக்கும் போது, அதாவது சுய நினைவில் இல்லாத போது ஏன் கலவியில் ஈடுபட ஒத்துழைக்கக் கூடாது? ஏன் என்றால், நீங்கள் கற்பழிக்கப்படலாம்!
உங்கள் வாழ்க்கைத் துணை, மனைவி/கணவன்/காதலி/காதலன், அல்லது கலவிக்காக நீங்கள் அணுகிய நபர்/விபச்சாரி சுய நினைவில் இல்லாத போது அல்லது போதையில் உள்ள போது அவரை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. முரட்டுத் தனமாக கலவியில் ஈடுபடும் போது பாதியில் உங்களால் நிறுத்தவும் முடியாது.
போதை தலைகேறியிருக்கும் போது உங்கள் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க மாட்டார்கள். உங்களை கட்டாயப்படுத்த அதிக சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் உங்கள் மீது தமது முழு பலத்தையும் பாவித்து கலவியில் முரட்டுத்தனமகாக ஈடுபடலாம். உங்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கலாம். ஆபாசமாக பேசலாம். மிரட்டலாம். ஏன்! உங்கள் உடைமைகளையும் பறித்துக் கொண்டு செல்லலாம். சில வேளைகளில் உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
போதையில் இருப்பவர்களிடம் உங்களால் காண்டம்(Condom) அணிந்து கலவியில் ஈடுபடும் படி கூற முடியாது. அப்படியே அணிந்தாலும் காண்டம் கிழிந்தால் அதனை அவர்கள் மாற்ற மாட்டார்கள். தேவையற்ற கர்ப்பம், பாலியல் நோய்கள் இவர்களால் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
மது அருந்திய நபர்கள் தமது தேவையை பூர்த்தி செய்யும் வரை நல்லா வாழைப்பழம் மாதிரி இனிக்க இனிக்க பேசுவாங்க. ஆனால் நீங்க அவர்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக உணர்ந்தால் அவர்களின் கொடூரமான முகம் வெளியில் வரும்.
உங்கள் பாலியல் துணையிடம் இருந்து மது/சாராயம் அருந்திய வாடை/வாசம் வந்தால் அல்லது போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை பார்த்தால் அவருடன் தனிமையில் சந்திப்பதை அறவே மறுக்கவும்.
முன்ன பின்ன(Strangers) தெரியாத நபர்களை தமது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய அனுகும் ஆண்கள்(ஓரினச் சேர்க்கையாளர்கள் Gay/Bisexual/LGBT) இந்த விடையத்தில் உசாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாத்தையும் உருவிட்டு அம்மணக் குண்டியாக நிற்க வைத்து விடுவார்கள்.
பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதன் மூலம் இவ்வாறான பிரச்சனைகளை இலகுவாக சமாளிக்க கூடியதாக இருக்கும்.
தப்பித் தவறி கூட ஏதோ ஒரு நிலையில் போதையில் இருக்கும் நபருடன் தனிமையில் சந்திக்க நேர்ந்தால் நீங்களும் பதிலுக்கு வாழைப்பழம் மாதிரி இனிக்க இனிக்க பேசி பொது மக்கள் நிறைந்த பகுதிக்குக் கூட்டிச் சென்று கம்பி நீட்டவும்(கை விட்டு செல்லவும்).
Tips: ஏதோ ஒரு ஆபத்து நிகழப் போவதாக உணர்ந்தால் முதலில் உங்களுடன் கலவியில் ஈடுபட அழைத்து வந்த நபரை, அவரின் ஆசைக்கு ஒத்துழைப்பது போல நடித்துக் கொண்டு, முழு நிர்வாணப்படுத்தவும். பின்னர், அவர் எதிர்பார்க்காத நேரத்தில் அவ்விடத்தை விட்டு ஓடவும். நிர்வாணமாக நிற்பதால் அவரால் அவ்வளவு சீக்கிரம் உங்களைப் பின் தொடர முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு ஆண்குறி எழுச்சியில் பாதிப்பு இருக்கும். மது அருந்தும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்க அதிக வாய்ப்[ப்பு உள்ளது. அதனை மறைக்கவே அவர்கள் கலவியில் ஈடுபடும் போதும் மது அருந்தியிருப்பார்கள்.
மதுவை விட மயக்கம் தரக் கூடிய நீங்கள் அருகில் இருக்கும் போது மது எதற்கு? அவர்களுக்கு ஒரு வேளை உங்கள் மீது உண்மையான ஈர்ப்பு/காதல் இல்லாமலும் இருக்கலாம். அவதானமாக இருக்கவும்.
காண்டம் பாவிக்காமல் வாய்வழிப் பாலுறவில் ஈடுபட்டாலும் எயிட்ஸ் தொற்று ஏற்படும்.
ஆண்கள் மது அருந்துவதன் மூலம் அல்லது போதையாவதன் மூலம் விந்து வெளியேற்ற எடுக்கும் நேரத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கின்றனர். இது உண்மையல்ல. சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்களுக்கு Edging எனப்படும் விந்து வெளியேறப் போகும் நிலையை நெருங்கும் போது நிறுத்தி நிறுத்தி புணரும் கலவிப் பழக்கமே சிறந்த தீர்வாகும்.
Comments
Post a Comment